மாரி செல்வராஜ் எனும் நீலச்சங்கி


மாரி செல்வராஜ்  ... மிகச்சிறந்த கலைஞன் .. ஆகசிறந்த இயக்குனராக வருவார் என்ற எதிர் பார்ப்பை தன் முதல் படமான பறி ஏறும் பெருமாள் படத்தில் மூலம் எடுத்தவர் ... 




இரண்டாவது படம் பெரிய பேனர், தேசிய விருது பெற்ற நடிகர், மீண்டும் அதே கதை களம், குரலற்றவர்களின் பார்வையில் அவர்களுடைய வலியையும், வரலாற்றையும் சொல்லும் படமாக வந்துள்ள கர்ணனில் ஏன் இந்த பிழை? 

95களில் நடைபெற்ற சம்பவத்தை 97 இல் நடப்பது போல சித்தரித்தது வெறும் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ள முடியாது..

படம் நெடுக குறியீடுகளை வைக்க தெரிந்த இயக்குனர் அவ்வளவு முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை ..

திமுக ஆட்சியில் நடந்ததை முதல் படத்தில் தைரியமாக  சொல்ல தெரிந்த ஒருவருக்கு அதிமுக ஆட்சியில் நடந்தைவற்ற கதையாக எடுக்கும் போது மட்டும் ஏன் மாற்றி போட வேண்டும்? அம்மையார் இருந்திருந்தால் கூட பயத்தில் மாற்றி விட்டார் என சொல்ல முடியும் இப்போது அதற்கும் வாய்ப்பில்லை..

எதிப்புகள் வந்த பின்னே '90 களின் பிற்பகுதி' என மாற்றி போட்டிருக்கிறார் .. முன்னதிற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என தெரியவில்லை ...  இதற்கு பருத்தி மூட்டை அங்கையே இருந்திருக்கலாம் ... 

இனிமேலாவது இது போன்ற நீல சங்கிகளுக்கு  நம் சில்லறையை சிதறவிடுவதை நிறுத்தவேண்டும் ....

- சக்தி😎


Comments

Popular posts from this blog

இதுக்கு பேரு தான் பெருமைக்கு பன்னி மேக்கறது

இந்த காளியோட ஆட்டத்தை இப்போ தான பாக்க போற